2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு நகரத்திற்கு கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டத்தை (பொதி II) நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி முறியுடன் உள்ளூர் வங்கிகளினால் நிதி ஏற்பாடு செய்தல் - அமைச்சரவையினால் உள்நாட்டு வங்கிகளின் கடன் தொகையை பயன்படுத்தி 39.19 பில்லியன் ரூபா செலவில் 34 நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டங்களிலிருந்து கருத்திட்டமொன்றான கொழும்பு நகரத்திற்கு கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள நகரங்களுக்கான நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 1.159 மல்லியன் ரூபாவை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை வங்கிக்கு திறைசேரி முறியொன்றை வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |