2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை கணக்கிடுதல் - தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் விலைமட்டங்களில் நிகழும் மாற்றங்களையும் பணவீக்க விகிதாசாரத்தையும் கணக்கிடும் பொருட்டு கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் தயாரிக்கப்படுகின்றது. இந்த விலைச்சுட்டெண் மூலம் கொழும்பு நகர எல்லைக்குள், நிகழும் விலை மாற்றங்கள் தெரிந்தாலும் தேசிய ரீதியில் விலை மட்டத்தில் நிகழும் மாற்றங்களை அது பிரதிபலிப்பதில்லை. ஆதலால் கொழும்பு விலைச்சுட்டெண்ணுக்கு மேலதிகமாக தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அறிமுகப்படுத்துவதற்கும் அதற்காக 2013 ஆம் ஆண்டை அடிப்படை வருடமாகக் கருதுவதற்கும் 2015 நவெம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் 21 ஆம் திகதியில் உத்தேச தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை வெளிப்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |