2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை மின்சார சபையினாலும் இலங்கை மின்சார தனியார் கம்பனியினாலும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்திய மின்மாற்றிகள், உலோகங்கள் உட்பட ஏனைய கழிவு இரும்புகளை அப்புறப்படுத்துதல் - இலங்கை மின்சார சபையினாலும் இலங்கை மின்சார தனியார் கம்பனியினாலும் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் சகல பழுதடைந்த மின்மாற்றிகள், உலோகங்கள் உட்பட ஏனைய கழிவு இரும்புகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு மூலப்பொருளாக வழங்கும் பொருட்டு இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு வழங்கப்படவேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பழுதடைந்த மின்மாற்றிகள், கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்ட பின்னரும் மேலும் சுமார் 3,000 வரையிலான பாவனையிலிருந்து அப்புறப்படுத்திய மின்மாற்றிகளும் ஏனைய கழிவுப்பொருட்களும் பெருமளவில் களஞ்சியங் களிலுள்ளன. இதனால் களஞ்சிய வசதிகள் குறைவடைந்துள்ளமையினால் அதற்காக பாரிய செலவினை ஏற்கவேண்டி நேரிடுகின்றமை, துருப் பிடித்துள்ளமையினால் பெறுமதி குறைவடைந்துள்ளமை சுற்றாடல் மாசடைவதற்கான காரணிகள் சூழலுக்குள் செல்கின்றமை போன்ற பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதனால் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்குத் தேவையான மின்மாற்றிகளையும் ஏனைய கழிவுப் பொருட்களையும் தவிர மீதி மின்மாற்றிகளையும் ஏனைய கழிவுப்பொருட்களையும் அரசாங்கத்தின் கொள்வனவு வழிகாட்டல்களுக்கு அமைவாக உள்நாட்டில் போட்டி விலைகோரி துரிதமாக விற்பனை செய்யும் பொருட்டு இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கும் அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |