2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனி லிமிடெட்டட் நிறுவனத்தில் நிலையான வைப்புகளைச் செய்த உரிமையாளர்களுக்கு மீளச் செலுத்துதல் - கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனியின் வைப்பாளர்கள் முகங்கொடுத்துள்ள நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவு தொடர்பிலான கால அட்டவணைக்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவுக்கு குறைந்த வைப்பாளர்களின் வைப்புகளை மீளச் செலுத்துவதற்காக 544.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட முற்பணம் பொதுத்திறைசேரியினால் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. இந்த கம்பனியின் வைப்பாளர்களுக்கு அவர்களுடைய வைப்புத் தொகையை மீள செலுத்துவதற்கான திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2 மில்லியன் ரூபாவுக்கும் 10 மில்லியன் ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையினை வைப்புச் செய்துள்ளவர்களின் வைப்புகளை மீளச்செலுத்துவதற்குத் தேவையான 3,945.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட முற்பணம் பொதுத்திறைசேரியினால் இலங்கை மத்திய வங்கிக்கு விடுவிப்பதற்கும் கோல்டன் கீ கிறடிட் கார்ட் கம்பனி லிமிடெட்டட் நிறுவனத்தின் சொத்துக்களை முடிவுக்கு கொண்டுவந்து அந்த தொகையை பொதுத்திறைசேரிக்கு மீளச் செலுத்துவதற்குமாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |