• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்துக்கும் இடையில் சுங்க விடயங்கள் சம்பந்தமான பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பிலான உடன்படிக்கை
- சுங்க விடயங்கள் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்கும் போது அந்தந்த நாடுகளின் சுங்க நடவடிக்கை நிருவாகிகளுக்கிடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதன் மூலம் இந்தப் பணிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்கு முடியுமாவதோடு, சட்டவிரோத போதைப் பொருட்கள், ஊக்கமருந்துப் பொருட்கள் என்பன நாடுகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் ஏற்படும் பிரதிகூலமான பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கும் இயலுமாகும். சுங்க சட்டங்களை மீறுவதனை தடுப்பதும், புலனாய்வு பணிகளை மேற்கொள்தல், பயிற்சி நடவடிக்கைகள் உட்பட மற்றைய தரப்பின் கோரிக்கையின் மீது தகவல்களை வழங்குதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்துக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பிலான பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.