2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் சம்பந்தமான உடன்படிக்கையை மீளாய்வு செய்தல் - அமைச்சரவையினால் ஏற்கனவே கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டக் கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் சம்பந்தமாகவுள்ள உடன்படிக்கைக் காலத்தை ஆறு (06) மாதங்களால் நீடிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் சம்பந்தமாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி பரிசீலனை செய்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவுக்கு அறிக்கையிடும் பொருட்டு பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் உரிய சகல துறைகளையும் சேர்ந்த சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |