• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்காக புதிய நான்கு மாடி கட்டடத்தொகுதியொன்றை நிருமாணித்தல்
- பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழ் வரும் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகள் இந்த மனையிடத்திற்கு வெளியே தாபிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நிருவாக ரீதியிலான கஷ்டங்கள் காணக்கூடியதாக உள்ளதோடு, புதிய அமைச்சுக்கான விடயநோக்கெல்லை மாற்றியமைக்கப்பட்டதுடன் நிதி அமைச்சின் கீழ் இயங்கிய இலங்கை கணக்காளர் சேவைக்கும் இலங்கை திட்டமிடல் சேவைக்கும் உரிய நிருவாகப் பணிகளும்கூட இந்த அமைச்சுக்குக் கையளிக்கப்பட்டுள்ளமையினால் இந்த பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும் தேவையான இடவசதிகளை இந்த மனையிடத்திலேயே ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது. இதன் விளைவாக அமைச்சின் மனையிடத்தில் ஏற்கனவே முறையற்ற விதத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டடங்கள் சிலவற்றை அப்புறப்படுத்தி நான்கு (04) மாடிக் கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.