2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களனி கங்கைக்கு மேலாக புதிய பாலமொன்று நிருமாணிக்கப்படுவதனால் பாதிக்கப்படும் Automobile Engineering Training நிறுவனத்தின் கட்டடங்களை மீள நிருமாணித்தலும் வேறு இடத்திற்கு கொண்டு செல்தலும் - களனி கங்கைக்கு மேலாக புதிய பாலமொன்றை நிருமாணிப்பதற்கான கருத்திட்டத்தின் செலவினை ஏற்கும் பொருட்டு 35,020 மில்லியன் யப்பான் யென்களைக் கொண்ட கடன்தொகை யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்படும் காணியில் நடாத்திச் செல்லப்பட்ட Automobile Engineering Training நிறுவனத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நேரிட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நிறுவனத்திற்குத் தேவையான கட்டடங்களை ஒருகொடவத்தையில் தொழில்பயிற்சி அதிகாரசபை அமைந்துள்ள மனையிடத்தில் மீள நிருமாணிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,539.8 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது . |