• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பயிலிளவல் உத்தியோகத்தர்களுக்காக தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக மூன்று மாடிகள் கொண்ட மூன்று கட்டடங்களை நிருமாணித் தல்
- இலங்கையில் உயர் பாதுகாப்புச் சேவைகள் தொழில்சார் கல்வி நிறுவனமானது 2008 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி யாகும். இந்த கல்லூரியின் மூலம் முப்படைகள் மற்றும் அரசாங்க சேவை போன்ற வற்றின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு உயர் பதவிகளில் பொறுப்புக்களை வகிப்பதற்கும், கையாள்வதற்கும் அதேபோன்று பதவி நிலைக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கும் அவர்களை பயிற்றுவிப்பதற்குத் தேவையான பாடநெறிகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று நட்புநாடுகளுக்கு தெரிவிக்கும் பரஸ்பர ஒத்துழைப்பாக வெளிநாட்டு உத்தியோகத் தர்கள் ஒருசிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கல்லூரியில் பாடநெறிகளைக் கற்கும் உள்நாட்டு வெளிநாட்டு உத்தியோகத் தர்களுக்கு உயர் தரத்திலான தங்குமிட வசதிகளை எற்பாடு செய்வதற்காக 120 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகள் கொண்ட மூன்று கட்டடங்களை நிருமாணிக்கும் பொருட்டு பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .