2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முன் வழக்கு விசாரணை நடவடிக்கைமுறைக்கான ஏற்பாடுகளைச் செய்தல் - வழக்கு விடயங்களின் போது நேரிடும் பெருமளவிலான காலதாமதம் நீதிமன்ற முறைமை தொடர்பில் பொது மக்களிடத்திலான நம்பிக்கை இல்லாமற் போவதற்கு காரணமாய் அமைந்துள்ளதோடு, இந்த தாமதம் காரணமாக பொதுமக்கள் கடுமையான பொருளாதார இன்னல்களுக்கும்கூட ஆளாகவேண்டி யுள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு காலத்திற்குக்காலம் பல்வேறுபட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தாலும் பாரிய எண்ணிக்கையி லான வழக்குகள் இன்றும் நீதமன்றங்களில் குவிந்துள்ளன. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன் வழக்கு விசாரணை நடவடிக்கைமுறையொன்றை அறிமுகப் படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் குடியியல் நடவடிக்கைமுறை சட்ட கோவைக்கு திருத்தங்களை வரையும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |