2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆட்களை பதிவுசெய்தல், மின்னணு தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல் தேசிய ஆட்பதிவேடொன்றைப் பேணுதல் - இலங்கையில் வசிக்கும் ஆட்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் ஆள் அடையாளத்தை மிக பாதுகாப்பான விதத்தில் உறுதிப்படுத்தும் பொருட்டு 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்பதிவு சட்டத்தின் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு கிடைத்துள்ள தத்துவங்களுக்கு அமைவாக தேசிய ஆட்களின் பெயர் பதிவேடொன்றைப் பேணுவதற்கும் அதற்கமைவாக மின்னணு தேசிய அடையாள அட்டையொன்றை வழங்கும் பொருட்டும் ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தபோதிலும் பல்வேறுபட்ட தொழினுட்பக் காரணங்களினால் இந்த செயற்பாடு தாமதமடைந்துள்ளது. எதிர்வரும் இரண்டு (02) வருட காலப்பகுதிக்குள் தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்கு உரிமையுள்ள சகல பிரசைகளுக்கும் மின்னணு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் உரிய கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |