2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மோதல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணிப்பதற்கான பிரேரிப்புகளைக் கோரல் - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை நிருமாணிக்கும் பொறுப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மோதல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீட்டுத் தேவைகளை நிறைவு செய்தல் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசின் மூலமும் வலியுறுத்தப் பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்திய அரசாங்கத்தின் அனுசரணையின் மீது ஏற்கனவே நடைமுறையிலுள்ள வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்டுவரும் 44,000 வீடுகளுக்கு மேலதிகமாக 137,529 வீடுகள் நிருமாணிக்கப்பட வேண்டுமென கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக வீடுகளை நிருமாணிப்பதற்கு ஊக்கமுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு தரப்புகளிடமிருந்து பிரேரிப்புகளை கோரும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |