2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமூக பாதுகாப்பு மற்றும் நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தகவல் தொழினுட்பத்தைப் பயன்படுத்துதல் - அரசாங்கத்தினால் சமூக நலனோம்பல், சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக வருடாந்தம் கணிசமான தொகை ஒதுக்கப்படுகின்றது. பிரசைகளை பொருளாதார இடர்களிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் முதியோர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள், நோயாளிகள், தங்கிவாழ்வோர்கள், தாய்மார்கள், தொழிலற்றவர்கள், வேலைகளின் போது அனர்த்தத்திற்கு உள்ளாகின்றவர்கள், பாடசாலை மாணவர்கள் போன்றோருக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றது. இந்த நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கத்தினை அடைவதனை உறுதி செய்து கொள்வதற்கும் இந்த நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் வழங்கப்படும் நலன்கள் வினைத்திறமையுடன் முகாமிப்பதற்கும் இந்த நிவாரணங்கள் அவை உரியதாகவேண்டிய நலன் பெறுநர்களுக்கு கிடைப்பதனை உறுதிசெய்வதற்கும் இயலுமாகும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் யாவற்றையும் மையப்படுத்தப்பட்ட கூறொன்றின் கீழ் மேற்பார்வை செய்வதற்கும் முகாமிக்கும் பொருட்டும் தகவல் தொழினுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |