2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுத்தல் - நாளுக்குநாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பொருட்டு பொருத்தமான நடவடிக்கைகளை முன்மொழிவதற்காக பின்வரும் உறுப்பினர்களை கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:
* மாண்புமிகு திலக் மாரப்பன அவர்கள்,
சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு அமைச்சர் - (தலைவர்); * மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்கள், நீதி அமைச்சர்; * மாண்புமிகு (திருமதி) சந்திராணி பண்டார அவர்கள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்; * மாண்புமிகு (திருமதி) மகேஸ்வரன் விஜயகலா அவர்கள், சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்; அத்துடன் * மாண்புமிகு (திருமதி) சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே அவர்கள், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர். |