• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000/- ரூபா பெறுமதிமிக்க போசாக்கு உணவுகளை வழங்குதல்
- அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட "கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000/- ரூபா பெறுமதிமிக்க போசாக்கு உணவுகளை வழங்குதல்" நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2015 ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள 1,500 மில்லியன் ரூபா கொண்ட நிதி ஏற்பாட்டிற்கு மேலதிகமாக இந்த அமைச்சுக்கு மேலும் 1,500 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.