• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் 50,000 வீடுகள் துரித வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட "அனைவருக்கும் வீடு" என்னும் 50,000 வீடுகள் நிகழ்ச்சித்திட்டம் மக்கள் பங்களிப்பு முறைக்கு அமைவாக செயற்படுத்தப்பட்டுள்ளதோடு, இதுவரை 35,290 வீடுகளின் நிருமாணிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட செலவு 5,000 மில்லியன் ரூபா ஆவதோடு இதுவரை அதற்காக உறப்பட்டுள்ள தொகையானது 1,328.45 மில்லியன் ரூபாவாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு தேவைப்படும் நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.