• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை பதிவு செய்தல்
- நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் அந்தந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக, அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 59,160 ஆகுமெனவும் இந்த வாகனங்களில் கணிசமான அளவு கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறுபட்ட பதவிகளை வகித்த இருப்பினும் தற்போது குறித்த பதவிகளில் இல்லாத ஆட்களினால் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றதெனவும் மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக, உத்தியோகபூர்வ உரிமையின்றி தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இதுவரை கையளிக்கப்படாத அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சுக்களின் செயலளார்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.