• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் கொன்சியூலர் நடவடிக்கைகளுக்காக கூட்டுக் குழுவொன்றைத் தாபித்தல்
- இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் 1979 ஆம் ஆண்டிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதோடு, அண்மையில் இந்த உறவுகள் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்கு மேலதிகமாக இலங்கை தொழிலாளர்களை பணிக்கமர்த்துதல், கலாசாரம், கல்வி போன்ற பல்வேறுபட்ட துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இலங்கையர்கள் சுமார் 250,000 பேர்கள் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தில் தொழில் செய்வதோடு, முக்கியமாக தேர்ச்சி வகுதியின் கீழ் கூடிய தொழில்வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு வழங்கும் பொருட்டு ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்துடன் நிலவும் கூட்டு செயற்பாட்டினை மேலும் மேம்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது. 2014 சனவரி மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் அபுதாபியில் நடாத்தப்பட்ட இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்குமிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் முதலாவது கூட்டத்தொடரில் இரண்டு நாடுகளினதும் பிரசைகளுக்கு கொன்சியூலர் பாதுகாப்பினையும் உதவியையும் வழங்கும் நோக்கில் கூட்டு கொன்சியூலர் குழுவொன்றைத் தாபிப்பதற்கு இருதரப்பும் உடன்பட்டுள்ளது.

இந்த குழுவினைத் தாபிக்கும் நோக்கமாவது இருநாடுகளுக்குமிடையேயான கொன்சியூலர் சார்ந்த ஒத்துழைப்பினை பலப்படுத்துவதும் மேம்படுத்து வதுமாகும். இதற்கமைவாக, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் கொன்சியூலர் நடவடிக்கைகளுக்காக கூட்டுக் குழுவொன்றைத் தாபிக்கும் பொருட்டிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் இந்த உடன்பாட்டினை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.