2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் உடன்படிக்கைக் காலத்தை ஆறு (06) மாதங்களால் நீடித்தல் - இலங்கை அரசாங்கத்துக்கும் உரிய கருத்திட்ட கம்பனிக்குமிடையில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் சம்பந்தமாக கைச்சாத்திட்டப்பட்ட 2014‑09‑16 ஆம் திகதியிடப்பட்ட உடன்படிக்கையானது, அதன் உடன்படிக்கை காலம் முடிவுறும் 2015‑09‑15 ஆம் திகதியிலிருந்து மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |