2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹெம்மாத்தகம நீர்வழங்கல் கருத்திட்டம் - 3,303.26 மில்லியன் ரூபாவைக் கொண்ட அரசாங்க நிதியின் மூலமும் 81.96 மில்லியன் யூரோக்களைக் கொண்ட வெளிநாட்டு நிதியங்களின் மூலமும் செயற்படுத்தப்படவுள்ள மேற்போந்த கருத்திட்டத்திற்கு பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த கருத்திட்டத்தின் மூலம் மாவனல்ல, அரநாயக்க, றம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு நலன் கிடைக்கும். இந்தக் கருத்திட்டத்தின் பணிகளின் தொடர் நடவடிக்கைகளின் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |