• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் வளர்ந்துவரும் பிராந்தியங்களில் நியாயமான உயர் பொருளாதார வளர்ச்சியொன்றை உருவாக்குதலும் அரசாங்க நிதி முகாமைத்துவமும்
- சனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமும் வளர்ந்துவரும் பிராந்தியங்களில் நியாயமான உயர் பொருளாதார வளர்ச்சியொன்றை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நன்கொடைகளை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் 2011 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மையுடன் கைச்சாத்திட்டுள்ளது. தற்போதைய சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு "சமூக ஒருமைப்பாட்டிற்கான ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்" என்னும் பெயரை "சனநாயக மறுசீரமைப்பு மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பில் ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்" என திருத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் சார்பில் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மையினால் வழங்கப்படும் பங்களிப்பினை மேலும் 3.49 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களினால் அதிகரிப்பதன் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு 10.73 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா போன்ற மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள" "வளர்ந்துவரும் பிராந்தியங் களில் நியாயமான உயர் பொருளாதார வளர்ச்சியொன்றை உருவாக்குதல்" என்னும் பெயரை "வளர்ந்துவரும் பிராந்தியங்களில் நியாயமான உயர் பொருளாதார வளர்ச்சியொன்றை உருவாக்குதலும் அரசாங்க நிதி முகாமைத்துவமும்" என திருத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் சார்பில் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மையினால் வழங்கப்படும் பங்களிப்பினை மேலும் 3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களினால் அதிகரிப்பதன் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு 14.71 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.