• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உர கொள்வனவு - 2015 (நவம்பர் மாத வழங்குகை)
- உர மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் சலுகை விலையின் கீழ் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமானது அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி (லக் பொஹர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி (கொமர்ஷல் பொஹர) மூலம் கமத்தொழில் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கமைவாக 2015 நவம்பர் மாதத்தில் தேவையான உர அளவினை விவசாயிகளுக்கிடையில் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியற் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.