• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை பாதுகாத்தல்
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான பொறுப்பு அமைச்சரவைக்கு கையளிக்கப்பட்டுள்ளதெனவும், அமைச்சரவை, பாராளுமன்றத்திற்கு கூட்டாக பொறுப்பாயிருத்தல் மறுமொழி கூறற்பாலதாய் இருத்தல் வேண்டுமெனவும் அரசியலமைப்பின் 42(2) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், சில சந்தர்ப்பங்களில் இந்த சம்பிரதாயத்தை மதிக்காமையினால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவான சந்தர்ப்பங்களும் இதன் காரணமாக நாட்டின் நலனின் பொருட்டு துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டியிருந்த சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த தடைகளும் தொடர்பிலான அனுபவமும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் உருவாவதை தடுக்கும் நோக்கில் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* கூட்டுப் பொறுப்பினை பாதுகாக்கும் அமைச்சரவையின் முக்கிய சம்பிரதாயத்தை மதித்தும் ஒழுக்கமுறையான அரசியல் கலாசாரமொன்றைப் புதிதாக தாபிக்கும் பொருட்டும் அமைச்சரவைக்குள்ள பொறுப்பினை புரிவதற்கும் அதற்கான அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துவதற்குமான உறுதியுரையொன்று அமைச்சரவையின் உறுப்பினர்கள் எல்லோரினாலும் வெளிப்படுத்தல்.

* நல்லாட்சியின் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக அமைச்சர்களினால் சுயமாக பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்கநெறிக் கோவையொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஒரு மாத காலத்தில் இவ்வாறு தயாரிக்கப்படும் ஒழுக்கநெறிக் கோவையை அமைச்சரவையினால் அங்கீகரிப்பித்துக் கொள்வதற்கும்.

இதற்கமைவாக, அமைச்சர்கள் அனைவரினாலும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினைப் பாதுகாப்பதாக இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதியுரை வழங்கப்பட்டது.