2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய அரசாங்கத்தின் பொது வேலைத்திட்டம் - அண்மையில் முடிவடைந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த நாட்டின் நலனின் பொருட்டிலான பிரேரிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தின் பொது வேலைத்திட்டம் தயாரிக்கும் தேவையும் இந்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானதெனவும் பிரதம அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கமைவாக, அதிமேதகைய சனாதிபதி அவர்களினதும் மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களினதும் தலைமைத்துவத்தின் கீழ் குறித்த வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமெனத் அமைச்சரவையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. |