2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய அரசாங்கத்தினால் சார்க் நாடுகளுக்காக நடைமுறைப்படுத்தவுள்ள செய்மதி - 2014 நவெம்பர் மாதம் நேபாளம் கத்மண்டு நகரத்தில் நடாத்தப்பட்ட வலய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் அல்லது சார்க் அமைப்பின் 18 ஆவது மாநாட்டில் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட சார்க் உறுப்பு நாடுகளுக்காக செய்மதியொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தும் பிரேரிப்பானது இலங்கை உட்பட சார்க் உறுப்பு நாடுகளினால் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சார்க் உறுப்பு நாடுகளுக்கு இந்தியாவினால் வழங்கப்படும் நன்கொடையாக உத்தேச செய்மதி திட்டமிடுதல், தயாரித்தல், நடைமுறைப்படுத்துதல் போன்ற பணிகள் இந்தியாவினால் மேற்கொள்ளப் படுவதோடு, சார்க் நாடுகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்துவதற்குத் தேவையான சேவைகளை வழங்கும் பொருட்டு அது கிழக்கு அகலாங்கு 48 இல் தாபிக்கப்பட்டுள்ளது. உத்தேச செய்மதி ஒருங்கிணைப்பு அலைவரிசை சம்பந்தமாக ஒவ்வொரு அரசாங்கத்துடனும் இரு தரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்தியா எதிர்பார்க்கின்றது. இதற்கமைவாக, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில்உத்தேச இருதரப்பு உடன்படிக்கைக்கு பிரதம அமைச்சர் மேற்கொள்ளும் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |