• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறைசேரி முறிகள் வழங்குவது சம்பந்தமான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை அதிகரித்தல்
- பாராளுமன்றத்தினால் பல்வேறுபட்ட நிதி மூலங்களின் ஊடாக அரசாங்கத்திற்கு கடன் பெற்றுக் கொள்ளக்கூடிய உச்சஎல்லை 1,780 பில்லியன் ரூபாவாக இருக்கவேண்டுமென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அடிப்படையாகக் கொண்டு முறிகளை வழங்குதல், திறைசேரி உண்டியல்களை வழங்குதல் உட்பட நிருவாகக் கடன் போன்ற பல்வேறுபட்ட வழிமுறைகள் ஊடாக அரசாங்கத்தின் நிதித் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட மொத்த கடன் எல்லைக்குள் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட எல்லை 2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 850 பில்லியன் ரூபா எல்லையில் இருந்தது. பிறகடன் வழிமுறை உபயோகத்திற்குப் பதிலாக திறைசேரி உண்டியல்கள் மூலம் கடன் பெறுவதற்கு முயற்சித்தமையினால் இந்த எல்லையை மேலும் 400 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 1,250 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கும் அதற்கான பிரேரிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.