2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்கத்தின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை மீளாய்வு செய்தல் - 2015 சிறு போகம் - அரசாங்கம் 2015 சிறு போகத்தில் 120,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்வதனை இலக்காகக் கொண்டுள்ள தெனவும் அதற்காக 6 பில்லியன் ரூபா இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகிய இரண்டு அரசாங்க வங்கிகளினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதெனவும் அதற்காக 2015‑09‑07 ஆம் திகதியிலிருந்து 4,653 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையொன்றை செலவு செய்யப்பட்டு 102,796.91 மெற்றிக் தொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதெனவும் அறுவடை தாமதப்பட்டதன் காரணமாக பொலன்நறுவை, அம்பாந்தோட்டை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் இதுவரை பூர்த்திசெய்யப்படவில்லையெனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக 2015 சிறு போகத்தில் நெல் கொள்வனவு சம்பந்தமாக மேலும் விடயங்களை பரிசீலனை செய்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரின் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |