• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத் திட்ட நிலைமை பற்றிய அறிக்கை - 2015
- 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 16 ஆம் பிரிவில் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு நாட்டின் நிதி நிலைமை பற்றிய தகவல்களை உள்ளடக்கி தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கையொன்று பொது தேர்தலொன்று நடாத்தப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டதன் பின்னர் நிதி அமைச்சின் செயலாளரினால் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டியதோடு, அதன் பின்னர் இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். இதற்கமைவாக, 2015 ஆம் ஆண்டின் முதலாவது 5 மாத காலத்திற்குள் அரசாங்க வருமானம், செலவுகள் கடன் எடுத்தல் தொடர்ப்பிலான தற்காலிக புள்ளி விபரங்களையும் 2015 ஆம் ஆண்டிற்கான விரிவான அரசாங்க நிதி சார்ந்த எதிர்கால நோக்குப் பற்றிய தகவல்களையும் கொண்ட "தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத் திட்ட நிலைமை பற்றிய அறிக்கையை" பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.