2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வருட நடுப்பகுதிக்கான நிதி நிலைமை பற்றிய அறிக்கை - 2015 - 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 10 ஆம் பிரிவில் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு வருட நடுப்பகுதிக்கான நிதி நிலைமை பற்றிய அறிக்கை நிதி அமைச்சரினால் பொதுமக்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டும் யூன் 30 ஆம் திகதியன்றுக்கு வழங்க வேண்டுமென்பதோடு, அதன் பின்னர், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலும் வேண்டும். இதற்கமைவாக 2015 ஆம் ஆணடின் முதல் நான்கு (04) மாதங்களில் அரசாங்கத்தின் நிதி நிலைமையும் உலகளாவிய பொருளாதார போக்கும் தொடர்பிலான ஆய்வுகளும் நிதி அபிவிருத்தி சம்பந்தமான பரந்துபட்ட தெளிவுப்படுத்தலும் உள்ள 2015 ஆம் ஆண்டிற்கான வருட நடுப்பகுதிக்கான நிதி நிலைமை பற்றிய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |