• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தையும் குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்
- விரைவான நகரமயம், அதிகரித்த வர்த்தகச் செயற்பாடுகள், கைத்தொழில் வலயங்கள், போன்றன மிக உயர் தரத்திலான நீர்வழங்கல் கருத்திட்டங்களின் தேவையை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக அரசாங்கத்தினால் பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தையும் குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டத்தையும் ஐ.அ.டொலர் 280.1 மில்லியன் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் நீர் வளம் மாஓயா ஆகுமென்பதோடு பொல்கஹவெல, அலவ்வ, குருணாகல் (ஒருபகுதி), வீரம்புகெதர (ஒருபகுதி) ஆகிய 04 பிரரேதச செயலக பிரிவுகள் தழுவப்படும். குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் 250,000 வீடுகளுக்கு புதிய நீர் இணைப்புகள் 50,000 வழங்கி நாளொன்றுக்கு 10,000 கனமீற்றர் கொண்ட தற்போதைய நீர் தேவையையும் நிறைவு செய்து 380 கிலோமீற்றர் கொண்ட அனுப்பீ்ட்டு வழி தாபிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக, மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி பெற்றுக் கொள்வதற்காக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.