2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாளிகாவத்தை சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மற்றும் மாற்று சிகிச்சை கூறின் தீவிர சிகிச்சைப் பிரிவை நவீனமயப்படுத்தல் - மாளிகாவத்தையிலுள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை தேசிய நிலையத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தரும் சிறுநீரக நோயாளர்கள் சார்பில் மெச்சத்தக்க நோயாளர் சிகிச்சை சேவை வழங்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவும் தொற்றுக்குள்ளான நோயாளிகளை வேறாக்கி வைத்துக் கொள்ளும் பிரிவும் வதிவிட நோயாளிகள் சிகிச்சைப் பெறும் காவறைத் தொகுதிக்குள்ளேயே தாபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வதிவிட சிகிச்சை அளிக்கப்படும் சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகள் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பினை குறைக்கும் நோக்கில் இந்த நோயாளிகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கவைப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்த தீவிர சிகிச்சைப் பிரிவை துரிதமாக நவீனமயப்படுத்தும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |