• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 செப்ரெம்பர் 15-17 ஆம் திகதி வரை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்படும் "Sri Lanka Expo - 2016” கண்காட்சி

- இலங்கையின் ஏற்றுமதி திறனை எடுத்துக் காட்டி இலங்கை உற்பத்தியாளர்களுக்கு, ஏற்றுமதியாளர்களுக்கு, சேவை வழங்குநர்களுக்கு வெளிநாட்டு கொள்வனவாளர்களை, கூட்டுத் தொழில் முயற்சியாளர்களை, சாத்தியமான முதலீட்டாளர்களை சந்திக்க வைப்பதற்கான திறமுறை வர்த்தக மேம்பாட்டு வழிமுறையாவது சருவதேச வர்த்தக கண்காட்சிகளை ஒழுங்கு செய்வதாகும். அண்மைக்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பின்னணியில் கண்காட்சி, மாநாடு, சந்திப்புகள் அதேபோன்று ஒருங்கிணைவான நிகழ்ச்சித்திட்டங்கள், தொழிற்சாலைகளைப் பார்வையிடுவதற்குமான வாய்ப்புகள் போன்றவை உள்ளடக்கப்பட்ட சம்மேளனங்களுடனான வர்த்தக அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் "Sri Lanka Expo - 2016” கண்காட்சி 2016 செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சருவதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.