2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தற்போதைய நிலை - கடந்த அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தலைவரும் ஆணையாளர்களும் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை உரிய வகையில் நடாத்திச் செல்லும் பொருட்டு தேவையான வழிகாட்டல்களையும் ஒத்துழைப்பையும் வழங்காததன் காரணமாக எழுந்துள்ள நிலைமை பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தலைவரினதும் ஆணையாளர்களினதும் செயற்பாடுகள் காரணமாக இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டுள்ளமையினால் புலனாய்வுப் பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பாரிய எண்ணிக்கையிலான முறைப்பாடுகளுக்குரியதாக சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பதற்கு இது இடையூறாகவுள்ளமை தொடர்பிலும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது. |