2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை பொது வைத்தியசாலையை விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றாக அபிவிருத்தி செய்வதல் - நிதியிடும் பொருட்டு நெதர்லாந்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல் - 2015‑07‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் களுத்துறை பொது வைத்தியசாலையை விசேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலை யொன்றாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்குத் தேவையான 28.7 மில்லியன் யூரோ நிதி வசதியொன்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சினால் நெதர்லாந்தின் ரபோ வங்கியுடனும் இலங்கையின் ஹட்டன் நெஷனல் வங்கியுடனும் இரண்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்படவுள்ளமை பற்றி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |