• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறைசேரி உத்தரவாதத்துடன் உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட நிதியங்களின் மீது லக்கல புதிய நகரம் மற்றும் வில்கமுவ நீர்வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

- நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேற்போர்வையின் கீழ் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் லக்கல புதிய நகர நீர்வழங்கல் கருத்திட்டமும் வில்கமுவ நீர்வழங்கல் கருத்திட்டமும் 2017 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான நிதி உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு அதிகாரத்தைக் கையளிக்கும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.