2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக கட்டடமொன்றை நிருமாணித்தல் - தற்போதுள்ள கட்டடத்தில் நிலவும் இடவசதியின்மை காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு புதிய ஏழு (07) மாடிக் கட்டடமொன்றை மீயுயர் நீதிமன்றக் கட்டடத்தொகுதி மனையிடத்திலேயே நிருமாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் நிலக்காலிடும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் மீது வழங்கும் பொருட்டு நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |