2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அவுஸ்திரேலியாவின் நிதியுதவியின் மீது இலங்கையில் கிளினிக் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ முறைகள் தேவைப்படும் வைத்தியசாலைகளில் தாபிப்பதற்கான கருத்திட்டம் - பல்வேறுபட்ட தொற்றுப் பொருட்களுடனான கிளினிக் கழிவுகள் பொது சுகாதாரத்திற்கு தீங்கிழைக்காத வாறு உரிய வகையில் அப்புறப்படுத்தும் முகமைத்துவ வழிமுறையொன்று இல்லாமை இலங்கையிலுள்ள வைத்தியசாலைகள் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையொன்றாகும். இதற்கமைவாக, அரசாங்க வைத்தியசாலைகளுக்கு கிளினிக் கழிவுப்பொருட்களை முகாமிக்கும் முறையான வழிமுறையொன்றை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியில் தாபிக்கும் பொருட்டு தன்னார்வ அடிப்படை யில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பொன்றுக்கு இதற்கு முன்னர் அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டப் பிரேரிப்பை மீளாய்வு செய்து அறிக்கையிடும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவினாலும் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த கருத் திட்டத்திலுள்ள முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு விடயநோக்கெல்லையை பொருத்தமானவாறு மாற்றுவதற்கு உட்பட்டு மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |