2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
த சொய்சா மகளிர் வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான புதிய கூறின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல் - சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கொழும்பு, கிங்சி வீதியிலுள்ள த சொய்சா மகளிர் வைத்தியசாலை நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்தும் வருகைதரும் உட்சிக்கல் வாய்ந்த நோய் நிலைமை கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாரிய சேவையை ஆற்றுகின்றது. இந்த வைத்தியசாலை நடாத்திச் செல்லப்படும் கட்டங்கள் மிகப் பழமையானதோடு, இடவசதியின்மை தரம் மிக்க சேவையொன்றை வழங்குவதற்குத் தடையாகவுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் நிருமாணிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட ஒப்பந்தக்காரரினால் அவ்வேலைகளை செய்யாமல் கைவிட்டதன் காரணமாக தற்போது வேலை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலையின் வளர்ச்சி குன்றிய குழந்தைப் பிரிவை உள்ளடக்கிய புதிய குழந்தை பிரிவினை நிருமாணிக்கும் வேலைகளை துரிதமாக பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த நோக்கத்தை 325.4 மில்லியன் ரூபா செலவில் உடன்பயனாகு அடிப்படையில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |