2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - கலகெதர. மாவத்தகம நீர்வழங்கல் கருத்திட்டம் - ஏற்கனவே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள மேற்போந்த கருத்திட்டத்தின் ஒப்பந்தத்திற்கான தொகையை மீளாய்வு செய்யும் பொருட்டு அமைச்சினால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழுவுக்கும் உரிய ஒப்பந்தக்காரருக்கும் இடையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது 21 மில்லியன் ரூபா ஒரே தடவையில் வழங்கப்படும் கழிவாக பெற்றுக் கொடுப்பதற்கு ஒப்பந்தக்காரர் உடன்பாடு தெரிவித்துள்ளார். பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் அங்கீகாரமும் இதற்கு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இந்த கருத்திட்டப் பணிகளுக்கான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |