2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய பசுபிக் கடற்றொழில் ஆணைக்குழுவின் 34 ஆவது கூட்டத் தொடரையும் இந்த ஆணைக்குழுவின் 6 ஆவது வலய கல்வியாளர்களின் மாநாட்டையும் இலங்கையில் நடாத்துதல் - ஆசிய பசுபிக் கடற்றொழில் ஆணைக்குழு அதன் உறுப்பு நாடுகளின் நோக்கங்களுக்கு ஏற்றவாறு மீன்பிடி தொழிலின் பதனிடல் மற்றும் விற்பனை செற்பாடுகளை மேம்படுத்துவதன் மூலமும் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ திறமுறை மூலமும் ஆசிய பசுபிக் வலயத்தில் உள்ள நீரகவளமூலங்களை முழுமையாகவும் உரியவாறும் பயன்படுத்துவதனை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள வலய கடற்றொழில் அமைப்பொன்றாகும். இந்த ஆணைக்குழுவின் 6 ஆவது வலய கல்வியாளர்களின் மாநாட்டை 2016 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரைக்கும் அதன் 34 ஆவது கூட்டத் தொடரை 2016 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரைக்கும் இலங்கையில் நடாத்துவதற்காகவும் அதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உபசரணை வசதிகளை வழங்குவதற்குமாக கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |