• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச தொழில் அமைப்பின் 29 ஆவது சமவாயத்திற்கான நெறி முறைகளையும் சிபாரிசுகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

- இலங்கை சருவதேச தொழில் அமைப்பின் உறுப்பு நாடொன்றாகும். இதற்கமைவாக, 2014 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட சருவதேச தொழில் அமைப்பின் 103 ஆவது கூட்டத்தொடரில் அங்கீகரித்துக் கொள்ளப்பட்ட 29 ஆவது சமவாயத்திற்கான நெறிமுறைகள் அதாவது பலவந்தமாக தொழிலுக்கு அமர்த்தும் சமவாயத்திற்கான நெறிமுறையும் 203 ஆவது சிபாரிசும் அதாவது பலவந்தமாக தொழிலுக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான குறைநிரப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான சிபாரிசையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு தொழில் அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.