2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய சேமிப்பு வங்கியிடம் பெறப்பட்ட கடன்தொகையிலிருந்து 28 பில்லியன் ரூபாவை உரிய கடன் விடயநோக்கெல்லைக்குப் புறம்பான நோக்கங்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்யும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த வங்கிக் கடன் தொகையின் கீழ் ஏற்கனவே நடைமுறையிலுள்ள 24 வீதிக் கருத்திட்டங்களின் கீழான கொடுப்பனவுகளை தீர்வுசெய்யும் பொருட்டு 2015 ஆம் ஆண்டிற்குள் மேலதிக நிதி ஏற்பாடுகளுக்கு அங்கீகாரம் கோரல் - தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெறப்படும் 54.70 பில்லியன் ரூபா கடன் வசதியை பயன்படுத்தி நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலுள்ள இனங்காணப்பட்ட 28 வீதி கருத்திட்டங்களை உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களின் மூலம் புனரமைக்கும் வேலைத்திட்டமொன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் கடந்த காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள 28 பில்லியன் ரூபா தொகையானது உரிய வீதிக் கருத்திட்ட புனரமைப்பு பணிகளுக்குப் புறம்பாக வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப் பட்டுள்ளமையினால் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் உள்ளக விசாரணைகளை நடாத்துவதோடு, இது தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ள நிதி குறித்த கடன் தொகை பெற்றப்பட்ட நோக்கத்திற்குப் புறம்பான நோக்கங்களுக்கு பயன்படுத்தியுள்ளமை காரணமாக உரிய வீதி கருத்திட்டங்களின் புனரமைப்பு வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, இந்த கருத்திட்டங்களுக்கு உரியதாக செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கும் இந்த கருத்திட்டங்களின் வேலைகளை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியங்களையும் பொதுத் திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹஷிம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |