• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுநலவாய நாடுகளின் விலை மதிப்பீட்டு தாபனங்களைச் சேர்ந்த தலைவர்களின் மாநாட்டை கொழும்பில் நடாத்துதல்

- பொதுநலவாய நாடுகளின் விலை மதிப்பீட்டு தாபனங்களைச் சேர்ந்த தலைவர்களின் மாநாடு உறுப்பு நாடுகளுக்கிடையில் சொத்துக்களுக்குரிய பாவனை, உரிமைகள், அபிவிருத்தி மற்றும் மதிப்பிடல் போன்ற பரந்துபட்ட துறைகளின் அறிவு மற்றும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் வருடாந்தம் நடாத்தப்படுவதாகும். இந்த மாநாடு இம்முறை பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் வரும் ஒக்றோபர் மாதத்தில் கொழும்பில் நடாத்துவதற்குத் தேவையான பணிகளை ஒழுங்கு செய்யும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.