2015-07-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை புனரமைத்தல் - அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம் அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த சுவாயம்புனாத்தில் ஆனந்தகுட்டி பௌத்த விகாரையும் லலித்பூரில் ரத்தோமசிந்திரநாத் இந்து ஆலயமும் புனரமைப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த புனரமைப்புப் பணிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு உரிய உத்தியோகத்தர்களையும் தொழிநுட்பவியளர்களையும் கொண்ட குழுவொன்றை நேபாளத்திற்கு அனுப்புவதற்கும் உரிய நிருமாணிப்பு வேலைகளை இலங்கை தரைப்படைக்கு கையளிப்பதற்கும் இந்த புனரமைப்பு பணிகளுக்காக 345 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை புத்தசாசன அமைச்சுக்கு குறித்தொதுக்குவதற்குமாக புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |