2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மத்திய அதிவேக பாதை - மத்திய அதிவேக பாதையின் முதலாவது பகுதியாக கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான பாதை நிருமாணிக்கப்படவுள்ளது. இந்த பகுதியின் கடவத்தையிலிருந்து கொஸ்சின்ன வரை 5 கிலோ மீற்றர் பாதையானது சுற்றுவட்ட வீதியின் மூன்றாவது பகுதியின் ஒப்பந்தக்காரருடன் கலந்துரையாடியதன் பின்னர், சேமிக்கப்படும் நிதியிலிருந்து நிருமாணிக்கப்படுவதோடு, இயைபுள்ள ஒப்பந்தக்காரரினால் அதன் ஆரம்ப வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுக்களின் சிபாரிசின் பிரகாரம் இந்த பாதையின் கொஸ்சின்னயிலிருந்து மீரிகம வரையிலான 32.55 கிலோ மீற்றர் வரையிலான பகுதிக்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |