• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II
- மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக, தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை இயைபுள்ள ஒப்பந்தக்காரருடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் மூலம் 15,000 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளதோடு, எதிர்வரும் காலத்தில் புதிதாக 400,000 நீர் இணைப்புகளை வழங்கும் அரசாங்கத்தின் குறியிலக்கை நிறைவுசெய்வதற்கு இதிலிருந்து பங்களிப்புக் கிடைக்கும். இதன்படி மெதிரிகிரிய நீர் வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியங்களைப் பெறுவதன் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.