• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இரண்டு மாடி விடுதி ஒன்றை நிருமாணித்தல்
- 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தையில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, அரச கருமமொழிக் கொள்கையை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசாங்க உத்தியோகத்தர்களின், ஆசிரியர்களின், மொழி கற்பதற்கு விருப்பமுள்ளவர்களின் இருமொழி, மும்மொழி ஆற்றலை விருத்தி செய்தல் இதன் பணியாவதோடு, இதன் கீழ் சிங்களம், தமிழ், ஆங்கில மொழி கற்பிப்பதற்கு திறமையான ஆசிரியர்களை உருவாக்குதல் மொழி மற்றும் பேச்சு பெயர்ப்பாளர்களை பயிற்றுவித்தல், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மொழி பயிற்சி வழங்குதல், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொழி பயிற்சி பாடநெறிகளை நடாத்துதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. முக்கியமாக ஏற்கனவே பயிற்சி நிலையை பூர்த்தி செய்துள்ள மருத்துவர்களுக்காகவும் பிற அகில இலங்கை சேவைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்படும் இரண்டாவது அரச கருமமொழி வதிவிட பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை தாதி உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர்கள் சார்பிலும் நடாத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு, வதிவிட வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் வதிவிட பயிற்சி வாய்ப்புக்களை அதிகரிப் பதற்கு இது இடையூறாகவுள்ளது. இதற்கமைவாக ஏற்கனவேயுள்ள வதிவிட வசதிகளுக்கு மேலதிகமாக மேலும் 90 பேர்களுக்கு வதிவிட வசதியினை ஏற்பாடு செய்யக்கூடிய விடுதியொன்றை 98.8 மில்லியன் ரூபா செலவில் அகலவத்தையிலுள்ள தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மனையிடத்தில் நிருமாணிக்கும் பொருட்டு அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.