• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய சிறைச்சாலைகள் நிருவாகச் சட்டம்
- நடைமுறையிலுள்ள சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் 1877 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்டதோடு, சிறைச்சாலைகள் நிருவாகம் சம்பந்தமாக அதிலுள்ள ஏற்பாடுகள் நடைமுறைத்தேவைகளுக்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சருவதேச தரங்களின் கீழ் நடைமுறையிலுள்ள சிறந்த நோக்கங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கௌரவ ஹெக்டர் யாப்பா அவர்களின் தலைமைத்துவத்தின் கீழான கல்விமான்கள் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் சிறைச்சாலைகள் நிருவாகம் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை வரையும் பொருட்டு நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.