2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலஞ்சென்ற திம்புலாகல ஆரன்ய சேனாசனாதிபதி அதிவணக்கத்திற்குரிய சிறிதம்மரக்கித வன்சாலங்கார அனுவஜ்ஜக மல்தெனியே ஜினாலங்கார தலைமைத் தேரோ அவர்களின் மரணச் சடங்கினை அரச அனுசரணையில் நடாத்துதல் - காலஞ்சென்ற அமரபுர மகாநிக்காயவின் ஶ்ரீ தர்மரக்ஷித்த பிரிவின் தலைவரும் வடக்கு - கிழக்கு தமன்கடுவ இரு பிரதேசங்களினதும் பிரதான குருவானவரும் திம்புலாகல ஆரன்ய சேனாசனாதிபதி திம்புலாகல சாசனரக்ஷ்க பிரிவின் தலைவருமான அதிவணக்கத்திற்குரிய சிறிதம்மரக்கித வன்சாலங்கார அனுவஜ்ஜக மல்தெனியே ஜினாலங்கார தலைமைத் தேரோ அவர்களின் மரணச் சடங்கினை அரச அனுசரணையில் திம்புலாகலையில் நடாத்தும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |