• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளினிக் கட்டடத்தின் விரிவாக்கல் (கட்டம் II) - பொது வைத்தியசாலை, களுத்துறை
- நாட்டின் முக்கிய வைத்தியசாலையொன்றான களுத்துறை பொது வைத்தியசாலையில் நிலவும் இடவசதி போதுமானதாக இல்லாததன் காரணமாக அதன் நாளாந்த கிளினிக் சேவைகளையும் நோயாளர் உபசரிப்பு சேவைகளையும் நடாத்திச் செல்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இது தடையாயுள்ளது. ஆதலால், நோயாளிகளுக்கு உயர் மட்ட சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு களுத்துறை பொது வைத்தியசாலையில் கிளினிக் கட்டடத்தை மேலும் விருத்தி செய்யும் பொருட்டிலான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்குவதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.